துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வீடியோ ஆல்பம் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். சமீபத்தில் இவர் நடித்த என்ன சொல்லப் போகிறாய் என்கிற திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு அவை பிடிக்காமல் கேட்கும்போதே தான் தூங்கி விட்டதாக கூறினார் அஸ்வின்.
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அவரது பட வெளியீட்டையும் தள்ளி வைக்கும் அளவிற்கு நிலைமை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ள வார்த்தைகள் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
அவரது பதிவில் யார் என பெயர் குறிப்பிடாமல் "என்ன.. , பழிவாங்கறதா..? இல்லை.. நான் ரொம்பவே சோம்பேறி.. அதனால் நான் இங்கேயே தான் உட்கார்ந்திருக்க போகிறேன்.. கர்மா உன்னை.. " என மோசமான ஓரு ஆங்கில வார்த்தையை குறிப்பிட்டு அது என்னவென்று தெரியாதபடி அழித்தும் இருக்கிறார்.. யாரையோ பழிவாங்க விருப்பமில்லாமல் அதே சமயம் அந்த நபர் மீது கோபப்பட்டு இந்த பதிவை அவர் இட்டிருந்தாலும் இவ்வளவு மோசமான வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்க தேவையில்லை என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.