நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வீடியோ ஆல்பம் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். சமீபத்தில் இவர் நடித்த என்ன சொல்லப் போகிறாய் என்கிற திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு அவை பிடிக்காமல் கேட்கும்போதே தான் தூங்கி விட்டதாக கூறினார் அஸ்வின்.
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அவரது பட வெளியீட்டையும் தள்ளி வைக்கும் அளவிற்கு நிலைமை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ள வார்த்தைகள் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
அவரது பதிவில் யார் என பெயர் குறிப்பிடாமல் "என்ன.. , பழிவாங்கறதா..? இல்லை.. நான் ரொம்பவே சோம்பேறி.. அதனால் நான் இங்கேயே தான் உட்கார்ந்திருக்க போகிறேன்.. கர்மா உன்னை.. " என மோசமான ஓரு ஆங்கில வார்த்தையை குறிப்பிட்டு அது என்னவென்று தெரியாதபடி அழித்தும் இருக்கிறார்.. யாரையோ பழிவாங்க விருப்பமில்லாமல் அதே சமயம் அந்த நபர் மீது கோபப்பட்டு இந்த பதிவை அவர் இட்டிருந்தாலும் இவ்வளவு மோசமான வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்க தேவையில்லை என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.