பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு |
பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப் புதிய படம் தமிழில் அவர் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் பாணியில் ஆக்சன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகிறது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக முதலில் செய்தி வெளியானபோது ஒரு பேட்டியில் அவர் அதை மறுத்து விட்டார்.
இந்தநிலையில் கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா, ராசி கண்ணா போன்ற மூன்று நடிகைகளில் எந்த நடிகையை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனை தற்போது நடைபெற்று வருவதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிட அப்படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.