ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர்களுக்கு தந்தையாக அல்லது அவர்களுக்கு வில்லனாக என ஒரு காலத்தில் தவறாமல் இடம்பெற்று வந்தவர்தான் நடிகர் பிரகாஷ்ராஜ். தெலுங்கில் இப்போதும் அது தொடர்ந்தாலும் கூட, தமிழில் விஜய், அஜித் என இரண்டு பேருடனும் அவர் இணைந்து நடித்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
விஜய்யுடன் கடைசியாக வில்லு படத்திலும் அஜித்துடன் பரமசிவன் படத்திலும் இணைந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது விஜய்யுடன் 11 வருடங்களுக்கு பிறகும் அஜித்துடன் 16 வருடங்களுக்கு பிறகும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கவுள்ளார் என்கிற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முதன்முறையாக விஜய் நடிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்க இருக்கிறாராம். இந்தப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இதற்கு முன் இயக்கிய தோழா (ஊபிரி) படத்திலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மூன்றாவது முறையாக அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி சேரும் படத்திலும் அஜித் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ரசிகர்கள் எப்போதுமே இந்த 'கில்லி; கூட்டணியை மீண்டும் 'ஆசை'யுடன் ரசிக்க காத்திருக்கிறார்கள் என தாரளமாக சொல்லலாம்.