சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிலும் தனது முக்கிய பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை சவுகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார். இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகிலும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த பத்மஸ்ரீ விருதை சவுகார் ஜானகிக்கு வழங்கி கவுரவி்த்ததற்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் நாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வார்த்தை தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சிதான் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசை கிண்டல் செய்யும் விதமாக ஒன்றிய அரசு என்கிற பெயரில் அழைத்து வருகிறது. இப்படி அழைப்பது ஏற்கனவே பல தரப்பினரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு கலைஞர், அதிலும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் என்பவர் மத்திய அரசு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்று கூறுவது ஒரு சார்புத்தன்மை உடையதாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.