‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள படம் ஆர்ஆர்ஆர். இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்திருக்கிறார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ள இந்த படம் நேற்று வெளிவருவதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஆந்திராவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கொமரா பீம், அல்லூரி சீதாராம ராஜு என்கிற வீரர்களை பற்றிய கதை. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேற்கு கோதாவரியை சேர்ந்த அல்லூரி சவும்யா என்பவர் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராமராஜு, கொமரா பீம் ஆகியோர் ஆங்கிலேயர்களிடம் வேலை பார்த்தது போன்று தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக படத்தை உருவாக்கி உள்ளனர். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.




