எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'அட்டகத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அறிமுகப்படமே அவரைப் பற்றிப் பேச வைத்தாலும் அடுத்து இரண்டாவதாக அவர் இயக்கிய 'மெட்ராஸ்' படம் அதிகம் பேசப்பட்ட படமாக அமைந்தது.
கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்த அந்தப் படம் தமிழில் 2014ம் ஆண்டு வெளிவந்து. நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. அப்படத்தை ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த ஜனவரி மாதம் 13ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். படத்திற்கு 'நா பேரு சிவா 2' என வைத்துள்ளார்கள்.
இதற்கு முன்பு கார்த்தி நடித்த 'நான் மகான் அல்ல' படத்தை 2010ம் ஆண்டில் 'நா பேரு சிவா' என தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அப்போது அந்தப் படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், அதே பெயரில் '2' என சேர்த்து இரண்டாம் பாகம் போல 'நா பேரு சிவா 2' என 'மெட்ராஸ்' தெலுங்கு டப்பிங் படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள்.