துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ராஜமவுலி இயக்கி உள்ள ஆர் ஆர் ஆர் படம் ஜனவரி 7ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது மறு தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டனர். இதற்கு கொரோனா மூன்றாவது அலை காரணம் என்று செய்திகள் வெளியான போதும் உண்மை காரணம் அது மட்டுமே இல்லையாம்.
தற்போது தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். என்றாலும் ஆந்திரா, தெலுங்கானாவில் இந்த நிலை இல்லை. அதனால் திட்டமிட்டபடி ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிட படக்குழு தயாரானபோதும், ஆந்திராவில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள பல தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே ஆர்ஆர்ஆர் படம் இந்தியா முழுக்க வெளியான போதும், ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த குறைந்த கட்டணத்தில் போட்ட பணத்தை எடுப்பது சிரமம் என்ற விஷயத்தை கருத்தில் கொண்டுதான் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டார்களாம்.
இது குறித்து கடந்த 2020ஆம் ஆண்டிலேயே சிரஞ்சீவி, ராஜமவுலி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் அங்குள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை வைத்தனர், அப்போது பெரிய பட்ஜெட் படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார்கள். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி அந்த கோரிக்கையை ஏற்காமல் ஏற்கனவே இருந்த டிக்கெட் கட்டணத்தையும் தற்போது குறைத்து விட்டுள்ளார். இதன் காரணமாகவே இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் போட்ட பணத்தை எடுப்பது கடினமாகிவிடும் என்று தான் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அங்குள்ள திரையுலகினர் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.