சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி |
இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையம் கானா பாடகர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்து வருகிறார். இதனால் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் சில கானா பாடகர்களின் வரம்புகள் எல்லை மீறும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இணையத்தில் வலம் ஒரு பாடல் மனதை வலிக்க செய்கிறது. பெரம்பூரை சேர்ந்த சரவணன் (சரவெடி சரண்) என்பவர் மேடையில் ஒரு கானா பாடலை பாடுகிறார். அந்த பாடல் வரிகள் சிறுமிக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுப்போம். அதன்பிறகு அவளை வாந்தி எடுக்க வைப்போம் என்கிற பொருள் தருகிற மாதிரியான பாடல் வரிகளை பாடி உள்ளார்.
இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் புகார்கள் வரவே திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் பாடகர் சரவணனை கைது செய்துள்ளனர்.
பின்னர் போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் அளித்த சரண், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தான் பாடிய பாடலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சரண், பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பாடியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.