அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? | ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன் | இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.பி.பி. சரண் | சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம் | இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | இறுதி கட்டத்தில் '3பிஎச்கே' | 'காளிதாஸ்' 2ம் பாகம் தயாராகிறது | 'மைலாஞ்சி'யில் முக்கோண காதல் | எனது பயோபிக் என்றதும் மிரட்டுறாங்க.... என்னை பேச வைத்து விடாதீர்கள் : சோனா ஆதங்கம் |
இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையம் கானா பாடகர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்து வருகிறார். இதனால் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் சில கானா பாடகர்களின் வரம்புகள் எல்லை மீறும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இணையத்தில் வலம் ஒரு பாடல் மனதை வலிக்க செய்கிறது. பெரம்பூரை சேர்ந்த சரவணன் (சரவெடி சரண்) என்பவர் மேடையில் ஒரு கானா பாடலை பாடுகிறார். அந்த பாடல் வரிகள் சிறுமிக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுப்போம். அதன்பிறகு அவளை வாந்தி எடுக்க வைப்போம் என்கிற பொருள் தருகிற மாதிரியான பாடல் வரிகளை பாடி உள்ளார்.
இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் புகார்கள் வரவே திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் பாடகர் சரவணனை கைது செய்துள்ளனர்.
பின்னர் போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் அளித்த சரண், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தான் பாடிய பாடலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சரண், பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பாடியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.