புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
விக்ரம் நடித்த சாமி -2 படத்தை இயக்கிய ஹரி அதன் பிறகு சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்கயிருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதையடுத்து அருண் விஜய் நடிப்பில் யானை என்ற ஒரு ஆக்சன் கதையை இயக்கி வருகிறார்கள். கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஹரியும், அருண் விஜய்யும் இணைந்து உள்ள முதல் படம் என்பதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.