பிளாஷ்பேக் : மம்முட்டி வேண்டாம் என ஒதுக்கிய டைட்டில் மோகன்லாலுக்கு கிரீடம் சூட்டியது | கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? |
ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடித்திருந்த பேச்சுலர் படம் கடந்த 3ம் தேதி வெளிவந்தது. சதீஷ்குமார் இயக்கிய இந்த படம் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசியது. ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்றது. மூன்றாவது வாரமாக ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிப்பு விழாவை படக்குழு நடத்தியது.
ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது: ஒரு படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் அந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளதை நினைத்து மகிழ்கிறேன். ஒரு படத்திற்கு இதுதான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது தயாரிப்பாளரும், இயக்குனரும் தான்.
சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் பேச்சிலர் படம் ரசிகர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படம் 3வது வாரத்தைக் கடந்திருக்கிறது. மீடியாக்கள் தந்த அறிவுரைக்கும், விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. வெளியிடப்பட்ட கருத்துக்களில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்கிறோம். என்றார்.