மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்திரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடித்திருந்த பேச்சுலர் படம் கடந்த 3ம் தேதி வெளிவந்தது. சதீஷ்குமார் இயக்கிய இந்த படம் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசியது. ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்றது. மூன்றாவது வாரமாக ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிப்பு விழாவை படக்குழு நடத்தியது.
ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது: ஒரு படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் அந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளதை நினைத்து மகிழ்கிறேன். ஒரு படத்திற்கு இதுதான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது தயாரிப்பாளரும், இயக்குனரும் தான்.
சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் பேச்சிலர் படம் ரசிகர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படம் 3வது வாரத்தைக் கடந்திருக்கிறது. மீடியாக்கள் தந்த அறிவுரைக்கும், விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. வெளியிடப்பட்ட கருத்துக்களில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்கிறோம். என்றார்.