2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு கலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டிய நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபல சினிமா நடன இயக்குனர் ராதிகாவைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.
தொடர்நது 365 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாளில் ஒருவர், இரண்டாவது நாளில் இருவர், பத்தாவது நாளில் 10 பேர் என நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடன கலைஞர்களின் எண்ணிக்கையும் இருந்தது. 365 நாட்கள் தொடர்ந்து நிறைவு விழாவாக நாட்டிய பெருவிழா நடத்தப்பட்டது. இதில் 600 நடன கலைஞர்கள் பங்பேற்றார்கள்.
நீதிபதிகள் முன்னிலையில் இந்த நடன நிகழ்வு கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது. இதை தொடர்ந்து நடன இயக்குனர் ராதிகா மற்றும் அவரது குழுவினருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி இதனை வழங்கினார்.