பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ரேணிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இயக்கும் படம் ஐஸ்வர்யா முருகன். மாஸ்டர் பீஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரிக்கிறார்கள். அருண் பன்னீர்செல்வம். வித்யா பிள்ளை, ஹர்ஷ் லல்வானி ஜி. சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் , நாகேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ஜெனா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் பற்றி பன்னீர் செல்வம் கூறியதாவது: தமிழ் சினிமா காதலையும் காதலர்களின் வலியையும், பிரிவையும், இன்பத்தையும் பல படங்களில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒரு காதலர்களின் குடும்பங்களின் என்னென்ன துயரங்களை உண்டாக்கும். காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளையும்., கிளைகளையும் தாண்டி வேரோடும்.. ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது. காதலின் இந்த பக்கத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்த வருகிறது. என்றார்.