கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த உற்சாகத்தோடு அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் சிம்பு திடீரென சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று(டிச., 11) அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என வந்தது. தொடர்ந்து ஓரிரு நாள் மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.
சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே அவரது ரசிகர்கள், சீக்கிரம் அவர் குணமாகி வர வேண்டும் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.