மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'மெய்யழகன்' | கோலங்கள் தில்லாவுக்கு இந்த வயதில் கல்யாணமா? | கரகாட்டக்காரன் கனகாவா இது? | மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த பிரபலங்கள் : இப்படியா அசிங்கப்படுத்துவது? | மலையாள பாடல் பாடி மகளை தூங்க வைக்கும் ரன்பீர் கபூர் | சிரிக்காமல் சந்தேகத்துடன் படம் பார்த்த நிகிலா விமல் | சிறையில் 100வது நாள் : தொடர்ந்து ஜாமீன் கோரும் தர்ஷன் | ஜானி மாஸ்டர் விவகாரம் : மனம் திறந்த புஷ்பா 2 தயாரிப்பாளர் | ஹிந்தியில் ரூ.600 கோடி வசூலைக் கடந்த 'ஸ்திரீ 2' | 'தேவரா' : தனித்து தாக்கு பிடிப்பாரா ஜுனியர் என்டிஆர்? |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, கடந்த வருடம் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சித்ராவை, ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவர் இறந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் பலரும் தங்களது அஞ்சலியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுடன் இணைந்து நடித்த ஸ்டாலின் முத்துவும், ஹேமாவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டாலின் முத்து கூறுகையில், "மனித வாழ்வில் மரணம் இயற்கை தான். இயற்கையால் வந்தால் ஏற்கலாம். நீ வாழ வேண்டிய வயதில் வாடிய மலராகி உதிர்ந்து போன உன்னை எப்படி மறப்பது" என்றார்.
அதே போல் ஹேமாவும், "நீ இல்லாமல் ஒரு வருடம் கடந்துவிட்டது. நீ இப்போது சந்தோசமாக இருப்பாய் என நம்புகிறேன். நீ விரும்பியது போல் ஒரு வாழ்க்கையுடன் நீ திரும்பி வர வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன். இது வெறும் போஸ்ட் அல்ல. என் நினைவு. லவ் யூ." என கூறியுள்ளார்.