'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்.சி, 8ம் நூற்றாண்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சங்கமித்ரா என்ற படத்தை தயாரித்து, இயக்கப்போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். இதில், ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதன் போஸ்டர்களும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
பாகுபலி பாணியில் உருவாகும் இந்த படத்துக்கு 300 கோடி பட்ஜெட்டும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். ஆனால் சரியான இணை தயாரிப்பாளர் கிடைக்காததால் நீண்ட நாட்களாக படப்பிடிப்பை தொடங்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்தி நடிகை திஷா பதானியை தேர்வு செய்தனர்.
என்றாலும் படம் கைவிடப்பட்டது. தற்போது சங்கமித்ரா பட பணிகளை மீண்டும் தொடங்க சுந்தர் சி முடிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராபிக்சில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படமான 300 பாணியில் இந்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் உருவாக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.