அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தென் இந்திய மொழிகளிலேயே பிரபலமாகி விட்டார். தெலுங்கிலும் இந்த படம் ஹிட் அடித்தது. கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. தெலுங்கில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் மூலம் அனுதீப் தெலுங்கு வட்டாரத்தில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரித்து வர்மா கடைசியாக தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அடுத்து தீனி என்ற படத்தில் அசோக் செலவனுடன் நடித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.