நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது |
தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறவர் பிரவீனா. தமிழில் பிரியமானவளே, மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார், தற்போது ராஜா ராணி சீசன் 2ல் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்குகிறவர்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பகிர்ந்த வருவதாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாமிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய திருவனந்தபுரம் போலீசார் பிரவீனாவின் படத்தை ஆபாசமாக வெளியிட்டதாக கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன், பாக்யராஜ் என்ற இரு இளைஞர்களை கைது செய்தனர். இருவரும் திருவனந்தபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பிரவீனா கூறியிருப்பதாவது: என்னை பின் தொடர்பவர்களுக்கு என் அன்பான வணக்கம். கடந்த சில மாதங்களாக, தெரியாத சமூக வலைதள கணக்கு ஒன்று என்னைப் போல் நடித்து, என்னை பின்தொடரும் அனைவருக்கும் தேவையற்ற செய்திகளையும் படங்களையும் அனுப்பி வருகிறார்கள் . என் குடும்பத்தினர் மற்றும் என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் தேவையில்லாத சில புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். பலமுறை நான் எச்சரித்தும் பலனில்லை.
எனவே, நான் அதிகாரப்பூர்வமாக சைபர் போலீசில் புகார் செய்துள்ளேன். தற்போது என்னை பின்தொடர்பவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என்னைப் போல் நடிக்கும் அல்லது என் பெயரில் தேவையற்ற செய்திகளை அனுப்புகிறவர்களை நீக்கி விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கைது நடவடிக்கையை தொடர்ந்து, சம்பந்தபட்டவர்களை கைது செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் புகார் செய்ய முன்வருவதில்லை. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் அளிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.