திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர். அதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, அரண்மனை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மருத்துவ செலவுக்கு பண உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த கொரோனா காலகட்டத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகளை செய்து வந்தவரான பாலிவுட் நடிகர் சோனுசூட், சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து தான் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.