புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் விக்ரம் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவை திடீரென அவரது வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பி.சுசீலாவின் தீவிர ரசிகரான விக்ரம் அவரை நேரில் சந்திக்க விரும்பி உள்ளார். இதற்காக தனது மானேஜர் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். இதற்கு பி.சுசீலா அனுமதி அளித்தவுடன் வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார்.
அவருடன் பத்து நிமிடம் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தவர் சுமார் 2 மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். சுசீலாவும், விக்ரமும் இணைந்து சில பாடல்களை பாடி உள்ளனர். அடிக்கடி வந்து உங்களை சந்தித்து பேச அனுமதி தர வேண்டும் என்றும் அவர் சுசீலாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்று அவரும் தெரிவித்திருக்கிறார். அதோடு ‛‛என் வாழ்க்கைக் கனவு நனவானது என்றும், அதற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி'' என்றும் விக்ரம் கூறிவிட்டுச் சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த சந்திப்பு குறித்து தற்போது பாடகி சுசீலா தரப்பு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.