கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழில் 'இந்தியன் 2' படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை, சாட்டிலைட், ஓடிடி உரிமைகளை மட்டும் சுமார் 350 கோடி கொடுத்து அந்நிறுவனம் வாங்கிவிட்டார்களாம். ரீமேக் உரிமைகள், இசை உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மட்டும் தயாரிப்பாளர் அவரது வசம் வைத்துள்ளாராம்.
படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றால் கூட 350 கோடிக்கு விற்கப்பட்டால் தயாரிப்பாளருக்கு இப்போதே 50 கோடி லாபம் கிடைத்துவிடும். மேலும் இன்னும் விற்கப்படாத உரிமைகளான வெளிநாட்டு, இசை, ரீமேக் உரிமை ஆகியவற்றை விற்றால் அதுவே 100 கோடி வரை போகும்.
பான்-இந்தியா படங்களை பாலிவுட்டில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றன. இதனால், இந்த விலைக்குப் போகவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.