ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
தமிழில் 'இந்தியன் 2' படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை, சாட்டிலைட், ஓடிடி உரிமைகளை மட்டும் சுமார் 350 கோடி கொடுத்து அந்நிறுவனம் வாங்கிவிட்டார்களாம். ரீமேக் உரிமைகள், இசை உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மட்டும் தயாரிப்பாளர் அவரது வசம் வைத்துள்ளாராம்.
படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றால் கூட 350 கோடிக்கு விற்கப்பட்டால் தயாரிப்பாளருக்கு இப்போதே 50 கோடி லாபம் கிடைத்துவிடும். மேலும் இன்னும் விற்கப்படாத உரிமைகளான வெளிநாட்டு, இசை, ரீமேக் உரிமை ஆகியவற்றை விற்றால் அதுவே 100 கோடி வரை போகும்.
பான்-இந்தியா படங்களை பாலிவுட்டில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றன. இதனால், இந்த விலைக்குப் போகவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.