இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் 'இந்தியன் 2' படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை, சாட்டிலைட், ஓடிடி உரிமைகளை மட்டும் சுமார் 350 கோடி கொடுத்து அந்நிறுவனம் வாங்கிவிட்டார்களாம். ரீமேக் உரிமைகள், இசை உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மட்டும் தயாரிப்பாளர் அவரது வசம் வைத்துள்ளாராம்.
படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றால் கூட 350 கோடிக்கு விற்கப்பட்டால் தயாரிப்பாளருக்கு இப்போதே 50 கோடி லாபம் கிடைத்துவிடும். மேலும் இன்னும் விற்கப்படாத உரிமைகளான வெளிநாட்டு, இசை, ரீமேக் உரிமை ஆகியவற்றை விற்றால் அதுவே 100 கோடி வரை போகும்.
பான்-இந்தியா படங்களை பாலிவுட்டில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றன. இதனால், இந்த விலைக்குப் போகவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.