ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வரும் நவ-25ம் தேதி மாநாடு படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இதன் பிரீ புரமோஷன் நிகழ்ச்சியில், தன்னை சுற்றி பலர் பிரச்னை செய்கிறார்கள் என்று கூறி சிம்பு மேடையிலேயே கண் கலங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் வேட்டை மன்னன் படத்தில் நடித்த சிம்பு, அந்தப்படம் ஏன் கைவிடப்பட்டது என தற்போது மனம் திறந்துள்ளார்.
"வேட்டை மன்னன் படம் கிட்டத்தட்ட ஒரு கல்ட் கிளாசிக் படம். அந்தப்படத்தை அப்போது செய்தால் சரியாக இருக்காது என அதை நிறுத்திவிட்டோம். நெல்சன் திலீப்குமார் திறமையான இயக்குனர். அவருடைய டாக்டர் படத்தில் ஒர்க் அவுட் ஆன டார்க் காமெடியை ரசித்தேன். ஆனால் வேட்டை மன்னன் படத்தின் டார்க் காமெடியில் பத்து சதவீதம் கூட டாக்டரில் இல்லை என்றுதான் சொல்வேன்" என கூறியுள்ளார்.