போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் |
ட்ரீம் லைட் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூர் என்.ஹபீப் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் கோட்டைமுனி. புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
1980களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் வாழ்ந்த கோட்டை முனி என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. இலங்கை - தனுஷ்கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதையில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.
சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன், ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன், உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவில், எம்.எஸ்.பாண்டியன் இசையமைக்கும் இப்படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.