தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இந்த நிறுவனத்திடம் இருந்து 15 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்திருப்பதாக அவர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடத்தில் அந்த நிறுவனத்தைச் சார்ந்த ரூசோ என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 500 பேர்கள் இடத்தில் சம்மன் அனுப்பி நடத்திய விசாரணையில், அவர்களிடத்தில் இருந்து 800 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் ஆருத்ரா மோசடி விவகாரம் அம்பலத்துக்கு வந்த போது அது சம்பந்தப்பட்ட பலர் தலைமறைவாகிவிட்ட நிலையில், நடிகர் ஆர்.கே .சுரேஷ் கடந்த ஐந்து மாதங்களாக நாடு திரும்பாமல் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.