பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
எந்த மொழியானாலும் அதில் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சு உடனே கிளம்பி விடும். குறிப்பாக கேங்ஸ்டார் பாணி படங்கள் தான் இந்தப்பேச்சில் அதிகம் அடிபடுகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானபோது, அதன் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என அதன் இயக்குனர் பிரித்விராஜ் அறிவித்தார். அதற்கான வேலைகளையும் துவங்கியபோதுதான் கொரோனாவின் அடுத்தடுத்த இரண்டு அலைகள் அதை தற்காலிகமாக தடுத்தி நிறுத்தி வைத்துள்ளன.
தற்போது அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்கிற படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்தப்படம் ரூ.5௦ கோடி வசூலையும் தாண்டி விட்டது. இதை தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடியபோது, இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என ரசிகர்கள் கேட்டனர். அதற்கு, “நிச்சயமாக.. அதற்கான வேலையை விரைவில் ஆரம்பிக்க போகிறேன்” என கூறியுள்ளார் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.