அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
எந்த மொழியானாலும் அதில் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சு உடனே கிளம்பி விடும். குறிப்பாக கேங்ஸ்டார் பாணி படங்கள் தான் இந்தப்பேச்சில் அதிகம் அடிபடுகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானபோது, அதன் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என அதன் இயக்குனர் பிரித்விராஜ் அறிவித்தார். அதற்கான வேலைகளையும் துவங்கியபோதுதான் கொரோனாவின் அடுத்தடுத்த இரண்டு அலைகள் அதை தற்காலிகமாக தடுத்தி நிறுத்தி வைத்துள்ளன.
தற்போது அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்கிற படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்தப்படம் ரூ.5௦ கோடி வசூலையும் தாண்டி விட்டது. இதை தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடியபோது, இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என ரசிகர்கள் கேட்டனர். அதற்கு, “நிச்சயமாக.. அதற்கான வேலையை விரைவில் ஆரம்பிக்க போகிறேன்” என கூறியுள்ளார் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.