பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் படம் சில சர்ச்சைகளில் சிக்கியபோதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்தபடம் நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதோடு இந்த படத்தில் இடம் பெற்ற ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தற்போது வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ராசாக் கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு தான் வீடு கட்டி கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், செய்யாத குற்றத்திற்காக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய நிலையை அறிந்து வருத்தமுற்றேன். பார்வதி அம்மாளுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்கிறேன். பார்வதி அம்மாளின் வறுமை நிலையை எனது கவனத்துக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
மேலும், 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுவதும் பேசு பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவுக்கும், ஜெய்பீம் படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கும், இயக்குனர் ஞானவேல் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.