பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் கராத்தே கார்த்தி. மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் அகில இந்திய காவல் துறை பாக்சிங் போட்டியில் 2003 ஆம் ஆண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர். அதுமட்டுமல்லாது கராத்தே பிளாக் பெல்ட் வாங்கியதோடு, அகில இந்திய கராத்தே போட்டிகளில் 13 முறை சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜூடோ, கிக் பாக்சிங் ஆகிய கலைகளும் கற்றவர்.
சினிமா மீதும், நடிப்பின் மீதும் வைத்திருந்த ஆதீத காதலால் போலீஸ் வேலையை துறந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்யத் துவங்கினார். கமலின் தசாவதாரம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை துவங்கினார்.
சிங்கம் 3, தபாங் 3, என்னை அறிந்தால், பிகில், பேட்ட, இரவுக்கு ஆயிரம் கண்கள், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சங்கத் தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தனது 14 வருட போராட்டத்திலிருந்து டாக்டர்தான் என்னை காப்பாற்றினார் என்கிறார் கராத்தே கார்த்திக்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கைதி படத்தில் எனது நடிப்பை பார்த்துவிட்டு டாக்டர் படத்தில் வாய்ப்பளித்தனர். எனது 14 வருட சினிமா முயற்சியில் என் திறமையை பார்த்து வந்த முதல் வாய்ப்பு இதுதான். தற்போது நிறைய இயக்குனர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அது இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடிக்க செய்துவிட்டது. என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் கராத்தே கார்த்தி.