மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அவுட்சைடர் பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். டாப்சி சினிமா பின்புலம் இல்லாமல் இருந்து வந்து சினிமாவில் வென்றவர். எனவே தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இப்படி பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.
சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்ட நடிகை சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு பாலிவுட்டில் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமந்தா நடிக்க இருக்கும் புதிய படத்தை டாப்சியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். இந்தப் படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.