கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று நயன்தாராவே ஒரு டிவி பேட்டியில் தெரிவித்தார். இதனிடையே, ஹிந்தியில் ஷாரூக்கானுடன் நயன்தாரா நடிக்கவிருந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
போதைக் பொருள் வழக்கில் ஷாரூக்கான் மகன் சிக்கி சிறையில் இருப்பதால் அவர் தன்னுடைய ஹிந்திப் பட படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். அட்லீ இயக்கி வரும் அந்தப் படம் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு தள்ளிப் போவதால் ஏற்கெனவே மற்ற படங்களுக்காகக் கொடுத்த தேதிகளுக்கு சிக்கல் வரும் என்பதால் அப்படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறார் என்கிறார்கள்.
இருந்தாலும் இந்த வருடத்தில் நயன்தாரா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகத்தான் சமீபத்தில் கோவில்களுக்குச் சென்று வந்தார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. திருமணத் திட்டம் காரணமாகவும் ஷாரூக்கான் படத்திலிருந்து விலகக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி நயன்தாராவிடமிருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே இது உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும்.