தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று நயன்தாராவே ஒரு டிவி பேட்டியில் தெரிவித்தார். இதனிடையே, ஹிந்தியில் ஷாரூக்கானுடன் நயன்தாரா நடிக்கவிருந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
போதைக் பொருள் வழக்கில் ஷாரூக்கான் மகன் சிக்கி சிறையில் இருப்பதால் அவர் தன்னுடைய ஹிந்திப் பட படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். அட்லீ இயக்கி வரும் அந்தப் படம் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு தள்ளிப் போவதால் ஏற்கெனவே மற்ற படங்களுக்காகக் கொடுத்த தேதிகளுக்கு சிக்கல் வரும் என்பதால் அப்படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறார் என்கிறார்கள்.
இருந்தாலும் இந்த வருடத்தில் நயன்தாரா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகத்தான் சமீபத்தில் கோவில்களுக்குச் சென்று வந்தார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. திருமணத் திட்டம் காரணமாகவும் ஷாரூக்கான் படத்திலிருந்து விலகக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி நயன்தாராவிடமிருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே இது உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும்.