தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் |
சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் பிரிந்தார். இந்த பிரிவுக்கான காரணம் குறித்து பலவாறான தகவல்கள் வெளியானது. குறிப்பாக சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார், அதனை அவரது கணவர் குடும்பம் தடுத்தது என்றும், சமந்தாவுக்கும் ஒரு காஸ்ட்யூம் டிசைனருக்கும் இருந்த நெருக்கம்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் இதனை மறுத்த சமந்தா தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனாலும் பல தெலுங்கு யு டியூப் சேனல்ககளில் சமந்தா பிரிவுக்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்தும், அவருக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.