தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை சமந்தாவுக்கும், 'பேமிலி மேன், பார்சி, சிட்டாடல்' இணையத் தொடர்களின் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொரு என்பவருக்கும் இடையே காதல் என கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திருமணமானவரான ராஜ் அவருடைய மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.
சமந்தா - ராஜ் இருவருக்கும் இடையே 'பேமிலி மேன்' படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. சமந்தா தற்போது மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறியுள்ளார். நேற்றைய தீபாவளித் திருநாளை புதிய வீட்டில் தனது காதலர் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும், பட்டாசு வெடிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சமந்தா.
இதன் மூலம் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார்களோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். சமந்தா, ராஜ் இதுவரையில் தங்கள் காதலைப் பற்றி எதுவும் சொன்னதில்லை.