பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பிரபல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த பின்னர், அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் கதையின் நாயகியாகவும் வரலாற்று கதாபாத்திரங்களிலும் நடிக்கும் விரும்புகின்றனர் முன்னணி நடிகைகள். குறிப்பாக புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்கு அவர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டை சேர்ந்த கங்கனா ரணவத், ஜான்சிராணியின் வாழக்கை வரலாறாக உருவான மணிகர்ணிகா மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான தலைவி வெளியான படங்களில் அவர்களது கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்தநிலையில் பூஜா ஹெக்டேவும் அப்படி ஒரு பிரபலத்தின் சுயசரிதையில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் பூஜா ஹெக்டே. அப்போது தனக்கு ஜெய்ப்பூர் மூன்றாவது மகாராணி காயத்ரி தேவியின்யின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக கூறினார். ஜெய்ப்பூர் மகாராணியான காயத்ரிதேவி 12 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் ராஜமாதா என ஜெய்ப்பூர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.