ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு |
கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்று முன்னணி நாயகி வரிசைக்கு உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதே சமயத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
அந்தப்படம் கொடுத்த நம்பிக்கையில் அடுத்ததாக கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை விட கதையின் நாயகியாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இதே பாணியில் விளையாட்டு வீராங்கனையாக அவர் நடித்துள்ள குட்லக் சகி படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த வயதிலேயே நாம் இப்படி கதையின் நாயகியை மையப்படுத்திய கதாபாத்திரங்களாக தொடர்ந்து நடிப்பது தவறு என்பதை புரிந்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.. இதையடுத்து இனி கொஞ்ச காலத்திற்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடிப்பது என முடிவு செய்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்டா என்கிற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..