பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்று முன்னணி நாயகி வரிசைக்கு உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதே சமயத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
அந்தப்படம் கொடுத்த நம்பிக்கையில் அடுத்ததாக கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை விட கதையின் நாயகியாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இதே பாணியில் விளையாட்டு வீராங்கனையாக அவர் நடித்துள்ள குட்லக் சகி படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த வயதிலேயே நாம் இப்படி கதையின் நாயகியை மையப்படுத்திய கதாபாத்திரங்களாக தொடர்ந்து நடிப்பது தவறு என்பதை புரிந்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.. இதையடுத்து இனி கொஞ்ச காலத்திற்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடிப்பது என முடிவு செய்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்டா என்கிற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..