சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் |
முன்பெல்லாம் ஒரு படம் வெளியான பின்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் படம் தங்கள் சமுதாயத்தையும், தங்கள் மதத்தையும் காயப்படுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதன் பிறகு படப்பிடிப்பில் இருக்கும்போதே சில படங்களுக்கு தாங்களாக கேள்விப்பட்ட தகவல்களை வைத்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட உடனேயே சிலர் தாங்களாகவே ஏதோ கற்பனை செய்து கொண்டு உடனடியாக எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் மலையாளத்தில் பிரபல இயக்குனரும் திலீப்பின் நண்பருமான நாதிர்ஷா என்பவர், தான் அடுத்து இயக்கும் படத்திற்கு ஈஷோ என டைட்டில் வைத்துள்ளார். ஆனால் இந்த டைட்டில் கிறிஸ்துவர்களை புண்படுத்தும் விதமாக இருக்கிறது எனக் கூறி ஒரு சாரார் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதேசமயம் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் இயக்குனர் நாதிர்ஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள் இதுபற்றி இயக்குனர் நாதிர்ஷா கூறும்போது, இந்த படத்தின் டைட்டில் எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் வைக்கப்படவில்லை. படத்தில் ஹீரோவின் கதாபாத்திர பெயராகத்தான் வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பிறகு இப்போது எதிர்ப்பவர்கள் இதற்காகவா நாம் எதிர்த்தோம் என்று அவர்களே நினைப்பார்கள். அதனால் டைட்டிலை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.