தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
முன்பெல்லாம் ஒரு படம் வெளியான பின்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் படம் தங்கள் சமுதாயத்தையும், தங்கள் மதத்தையும் காயப்படுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதன் பிறகு படப்பிடிப்பில் இருக்கும்போதே சில படங்களுக்கு தாங்களாக கேள்விப்பட்ட தகவல்களை வைத்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட உடனேயே சிலர் தாங்களாகவே ஏதோ கற்பனை செய்து கொண்டு உடனடியாக எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் மலையாளத்தில் பிரபல இயக்குனரும் திலீப்பின் நண்பருமான நாதிர்ஷா என்பவர், தான் அடுத்து இயக்கும் படத்திற்கு ஈஷோ என டைட்டில் வைத்துள்ளார். ஆனால் இந்த டைட்டில் கிறிஸ்துவர்களை புண்படுத்தும் விதமாக இருக்கிறது எனக் கூறி ஒரு சாரார் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதேசமயம் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் இயக்குனர் நாதிர்ஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள் இதுபற்றி இயக்குனர் நாதிர்ஷா கூறும்போது, இந்த படத்தின் டைட்டில் எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் வைக்கப்படவில்லை. படத்தில் ஹீரோவின் கதாபாத்திர பெயராகத்தான் வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பிறகு இப்போது எதிர்ப்பவர்கள் இதற்காகவா நாம் எதிர்த்தோம் என்று அவர்களே நினைப்பார்கள். அதனால் டைட்டிலை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.