பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி திரையுலகில் நுழைந்து சமீபத்தில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து இருக்கிறார். இதை தொடர்ந்து அனைத்து மொழிகளில் இருந்தும் பல திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் இப்போது வரை தங்களது வாழ்த்தை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். இதுவரை 3 தேசிய விருதுகள், 7 கேரள அரசு விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள மம்முட்டி, மலையாள சினிமாவுக்கு மட்டுமல்லாது கேரளாவின் முக்கிய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார்.
இந்தநிலையில் மம்முட்டியின் 50வது வருட விழாவை கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரள செய்தி ஒளிபரப்பு துறை மற்றும் திரைப்பட வளர்ச்சி துறையைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜி செரியன் சட்டசபையில் வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மம்முட்டியின் ரசிகர்கள் இன்னும் உற்சாகமாகி சோசியல் மீடியாவில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்