துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பிரபல மலையாள சின்னத்திரை நடிகை அம்பிலி தேவி. மலையாள தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி. பின்னர் சீரியல் ஹீரோயின் ஆனவர். 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து முடித்திருக்கிறார். சுமதி ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த விஸ்வதுளசி படத்தில் இளவயது நந்திதா தாஸாக நடித்தவர் அதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா ஒளிப்பாதிவாளர் லோவல் என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2018ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதற்கு அடுத்த ஆண்டே மலையாள சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அம்பிலி தேவி தனது இரண்டாவது கணவர் மீது புகார் அளித்தார். தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். தற்போது கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா போலீஸ் நிலையத்தில் கணவர் ஆதித்யன் ஜெயன் மீது புகார் கொடுத்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பான பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர்.