ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ், சேனல் ஒன்றின் நிருபராக பணியாற்றிய சுப்ரியா மேனன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2014ல் இவர்களுக்கு அலங்ரிதா என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஏழு வயதாகும் இந்த குழந்தை, தனது தந்தை ஒரு நடிகர் மட்டுமல்ல இயக்குனர் என்பதையும் கூட நன்றாக புரிந்து வைத்திருக்கிறதாம்.
அந்த வகையில் சமீபத்தில் தனது குழந்தை எழுதிய பத்து வரி சிறுகதை ஒன்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பிரித்விராஜ், சமீபத்தில் தான் கேட்ட கதைகளிலேயே, மிகச்சிறந்த கதை இதுதான் என்றும், இந்த படத்தை திரைப்படமாக இயக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அப்படி அந்த குழந்தை எழுதியுள்ள கதை இதுதான்.
அமெரிக்காவில் ஒரு அப்பாவும் மகனும் வசிக்கின்றனர். இரண்டாம் உலகப்போர் அங்கு நடந்தபோது, அவர்கள் அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு இடம் பெயர்கின்றனர். இரண்டு வருடங்கள் அங்கேயே வசிக்கின்றனர். போர் முடிந்தபிறகு, அவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி, சந்தோசமாக வாழ ஆரம்பிக்கின்றனர் என்று, அந்த குழந்தை தனக்கு தோன்றிய ஒரு சிறுகதையை எழுதியுள்ளது. ஏற்கனவே லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறிய பிரித்விராஜ், தனது மகள் சொன்ன கதையிலும் சினிமாவுக்கான அம்சங்கள் உள்ளன என்று கூறியுள்ளதுடன், இந்த கொரோனா தாக்கம் முடிவடைந்த பின்பு இந்த கதையை படமாக்கும் முயற்சியில் இறங்குவேன் என்றும் கூறியுள்ளார்