தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அறுபது வயதானாலும் கூட, இன்னும் பவர்புல் ஹீரோவாகவே நடித்து இளம் நடிகர்களுக்கு சவால் விட்டு வருபவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. பார்ப்பதற்கு முரட்டு தோற்றத்தில் காணப்பட்டாலும், சக நடிகர்களிடம் எப்போதும் அன்பு கொண்ட பாலகிருஷ்ணா, அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருபவர். அந்த வகையில் தற்போது போயப்பட்டி சீனு இயக்கத்தில் தற்போது அகண்டா என்கிற படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.
ஏற்கனவே ஶ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தவர் தான் ஸ்ரீகாந்த். பெரும்பாலும் கதாநாயகனாக நடித்து வரும் ஸ்ரீகாந்த் தற்போது தனது படத்தில் வில்லனாக நடிப்பதில் பாலகிருஷ்ணாவுக்கு பெரிய அளவில் சந்தோஷம் இல்லை. காரணம் ஸ்ரீகாந்தை கதாநாயகனாகவே தொடர்ந்து நடிக்கும்படியும் நல்ல கதைகளையும் படங்களையும் தேர்வு செய்து நடிக்கும்படியும் வில்லனாக நடிக்க கூடாது என்றும் அறிவுரை கூறியவர் தான் பாலகிருஷ்ணா.
ஆனால் தற்போது அவர் சொன்னதையும் மீறி அவருக்கு வில்லனாக நடிக்கும் சூழல் ஸ்ரீகாந்துக்கு ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் அவரது நடிப்பில் எந்த குறையும் சொல்லாத பாலகிருஷ்ணா, இனி மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டாம் என்றும் கதாநாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் கூறி, சில இயக்குனர்களையும் அவருக்கு சிபாரிசு செய்துள்ளாராம்.