துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கொரோனா முதல் அலை கடந்த வருடம் தீவிரமடைந்த சமயத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரையுலக பிரபலங்கள், லட்சங்களிலும் கோடிகளிலும் நிதி உதவியை அள்ளித் தந்தனர். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல நட்சத்திரங்கள் தங்கள் தரப்பிலிருந்து உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை விட, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
அந்தவகையில் தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த மருத்துவமனையில் இருந்து, ஆந்திராவில் தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது ஹிந்துபூர் தொகுதியில் உள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்காக இந்த மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார் பாலகிருஷ்ணா.