வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கொரோனா முதல் அலை கடந்த வருடம் தீவிரமடைந்த சமயத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரையுலக பிரபலங்கள், லட்சங்களிலும் கோடிகளிலும் நிதி உதவியை அள்ளித் தந்தனர். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல நட்சத்திரங்கள் தங்கள் தரப்பிலிருந்து உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை விட, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
அந்தவகையில் தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த மருத்துவமனையில் இருந்து, ஆந்திராவில் தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது ஹிந்துபூர் தொகுதியில் உள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்காக இந்த மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார் பாலகிருஷ்ணா.