மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ |
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தேவரா' படம் வெளியானது. இதனை தொடர்ந்து முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள ஜூனியர் என்டிஆர் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து 'வார் 2' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக நடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸை நோக்கிய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 14ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் பல வருடங்களாக ஜூனியர் என்டிஆருக்கு சண்டை காட்சிகளில் டூப் போடும் நடிகரான ஈஸ்வர் ஹரிஷ் என்பவர் 'வார் 2' படத்தில் நான் பணியாற்றவில்லை என்கிற தகவலை தற்போது கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஜூனியர் என்டிஆரின் பல படங்களில் நான் தான் அவருக்கு டூப்பாக நடித்துள்ளேன். 'வார் 2' படத்தில் நடித்துள்ள ஹிருத்திக் ரோஷனின் உடலமைப்புடன் ஒப்பிடும்போது சண்டை காட்சிகளில் ஜூனியர் என்டிஆரின் உடலமைப்பு சற்று குறைவு என்பதால் அதை சமன் செய்வதற்காக அந்த படத்தில் அவருக்கு டூப்பாக நடிக்க அழைக்கப்பட்டேன்.
ஆனால் அதற்காக அவர்கள் எனக்கு வழங்குவதாக சொன்ன ஊதியம், நான் ஹைதராபாத்தில் இருந்து மும்பை சென்று வரும் விமான செலவுகளுக்கே சரியாகப் போய்விடும். ஆனாலும் ஊதிய விஷயத்தில் சரியான உடன்பாடு எட்டப்படாததால் இந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பல வருடங்களாக இவர் ஜூனியர் என்.டி.ஆரின் 'ஆர்ஆர்ஆர், தேவரா' உள்ளிட்ட படங்களில் டூப்பாக பணியாற்றி வந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் கூட இவரது சம்பள விஷயத்தில் தலையிட்டு ஏன் சமரசம் செய்து வைக்கவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் பலர் எழுப்பி வருகின்றனர்.