ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தொடரும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் உடன் இணைந்து ஷோபனா நடித்துள்ளார். ஆபரேஷன் ஜாவா புகழ் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். கடந்த மாதம் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் தொடரும் திரைப்படம் முதல் காட்சியிலிருந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று கொச்சியில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இந்த படத்தை பார்க்க இயக்குனர் தருண் மூர்த்தி வந்திருந்தார். படம் பார்த்து முடித்துவிட்டு அவர் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோகன்லால் அவருக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்தார்.
அவரிடம் படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை கேள்விப்பட்டதாக கூறி தருண் மூர்த்தியை பாராட்டினார் மோகன்லால். அப்போது தருண் மூர்த்தி, தான் திரையரங்கில் இப்போதுதான் படம் பார்த்துவிட்டு வருவதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள் என்றும் கூறியபடி மோகன்லாலுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை ரசிகர்களிடம் காட்டினார். ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்த மோகன்லாலும் அவர்களிடம் சில வார்த்தைகள் உரையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.