பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் மம்முட்டியின் படங்கள் இந்த வருடம் கிட்டத்தட்ட சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அது எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மம்முட்டி. அதிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைக்கும் மம்முட்டியின் தற்போதைய புதிய போட்டோ ஒன்று தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மம்முட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். அதில் மேல் உள்ள கால் பாதத்தை ஒரு ஸ்டாண்ட் போல பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட பிளாக் டீ டம்ளரை அதில் வைத்துவிட்டு மொபைல் போனில் ஏதோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதே சமயம் இந்த புகைப்படத்தில் அவரது காலில் கொலுசு அணிந்திருப்பதால் இது சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'பஷூக்கா' திரைப்படத்திற்காக அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.