ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

நடிகர் மம்முட்டியின் படங்கள் இந்த வருடம் கிட்டத்தட்ட சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அது எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மம்முட்டி. அதிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைக்கும் மம்முட்டியின் தற்போதைய புதிய போட்டோ ஒன்று தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மம்முட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். அதில் மேல் உள்ள கால் பாதத்தை ஒரு ஸ்டாண்ட் போல பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட பிளாக் டீ டம்ளரை அதில் வைத்துவிட்டு மொபைல் போனில் ஏதோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதே சமயம் இந்த புகைப்படத்தில் அவரது காலில் கொலுசு அணிந்திருப்பதால் இது சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'பஷூக்கா' திரைப்படத்திற்காக அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.