கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்து விட்டார் ராம்சரண். இந்த படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தனது அடுத்த படமாக தெலுங்கு இளம் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்க துவங்கி விட்டார் ராம்சரண். இந்த இயக்குனர் தான் விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் ‛உப்பென்னா' என்கிற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். அந்த படத்தில் நடிகை கிர்த்தி ஷெட்டியையும் அறிமுகப்படுத்தியவர். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். தேவரா படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது.
கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் திவ்யேந்த் சர்மா என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். பாலிவுட்டில் கடந்த 15 வருடங்களாக குறிப்பிடத்தக்க நடிகராக அறியப்படும் இவர், இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார். இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவ-22 முதல் துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.