ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்து விட்டார் ராம்சரண். இந்த படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தனது அடுத்த படமாக தெலுங்கு இளம் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்க துவங்கி விட்டார் ராம்சரண். இந்த இயக்குனர் தான் விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் ‛உப்பென்னா' என்கிற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். அந்த படத்தில் நடிகை கிர்த்தி ஷெட்டியையும் அறிமுகப்படுத்தியவர். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். தேவரா படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது.
கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் திவ்யேந்த் சர்மா என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். பாலிவுட்டில் கடந்த 15 வருடங்களாக குறிப்பிடத்தக்க நடிகராக அறியப்படும் இவர், இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார். இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவ-22 முதல் துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.