பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் சிவாவின் தம்பியான நடிகர் பாலா, அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்தே உட்பட பல படங்களை நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் கடந்த 2010ல் பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் 2019ம் ஆண்டு விவாகரத்து செய்தார்கள்.
அதன் பிறகு எலிசபெத் உதயன் என்பவரை 2021ம் ஆண்டு திருமணம் செய்த நடிகர் பாலா, அவரையும் 2024ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்படியான நிலையில் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ருதா தற்போது இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், தனது முன்னாள் கணவரான நடிகர் பாலா, தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து இன்று காலை கேரளா போலீசார் நடிகர் பாலாவை கைது செய்துள்ளார்கள். அவர் மட்டுமின்றி பாலாவின் மேனேஜர் ராஜேஷ், நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.