அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
முன்னணி கன்னட நடிகராகன தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவை கடுமையாக விமர்சித்ததற்காக தனது ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கூலிப்படையை ஏவி படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்த வழக்கு நல்ல ஸ்டிராங்காக இருப்பதாகவும், அவர் தப்பிக்க வழியே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தர்ஷன் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக கன்னட நடிகர் சங்கத்தினர் நேற்று சாமராஜ்நகரில் உள்ள சங்க கட்டிடத்தில் சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் நடிகர்கள் ஜக்கேஷ், தொட்டண்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகை ஜெயமாலா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கொலை வழக்கில் சிக்கிய நடிகருக்காக பூஜை செய்யலாமா என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "இந்த பூஜை கன்னட திரையுலகம் வளர்ச்சி வேண்டி மேற்கொள்ளப்பட்டது. அண்மைக்காலமாக திரையுலகிற்கு சில சிக்கல்கள் வந்துள்ளன. அதிலிருந்து விடுபட்டு மீண்டும் உச்சநிலையை அடைய வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்காகவே சிறப்பு ஹோமம் நடத்தினோம். தர்ஷனுக்காக மட்டுமே நடத்தினோம் என கூறுவதை ஏற்க முடியாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.