வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

முன்னணி கன்னட நடிகராகன தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவை கடுமையாக விமர்சித்ததற்காக தனது ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கூலிப்படையை ஏவி படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்த வழக்கு நல்ல ஸ்டிராங்காக இருப்பதாகவும், அவர் தப்பிக்க வழியே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தர்ஷன் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக கன்னட நடிகர் சங்கத்தினர் நேற்று சாமராஜ்நகரில் உள்ள சங்க கட்டிடத்தில் சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் நடிகர்கள் ஜக்கேஷ், தொட்டண்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகை ஜெயமாலா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கொலை வழக்கில் சிக்கிய நடிகருக்காக பூஜை செய்யலாமா என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "இந்த பூஜை கன்னட திரையுலகம் வளர்ச்சி வேண்டி மேற்கொள்ளப்பட்டது. அண்மைக்காலமாக திரையுலகிற்கு சில சிக்கல்கள் வந்துள்ளன. அதிலிருந்து விடுபட்டு மீண்டும் உச்சநிலையை அடைய வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்காகவே சிறப்பு ஹோமம் நடத்தினோம். தர்ஷனுக்காக மட்டுமே நடத்தினோம் என கூறுவதை ஏற்க முடியாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.