கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண். 'உய்யாலா ஜம்பால' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கடைசியாக 'நா சாமி ரங்கா' படத்தில் நடித்தார். தற்போது திரகம்பர சாமி, பாலே உன்னாலே படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, தற்போது நடிகையுடன் தொடர்பில் இருக்கும் ராஜ் தருண் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஐதராபாத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண் நார்சிங் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “ராஜ் தருண் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, உடல் ரீதியாக பயன்படுத்தினார். அதன்பின்னர் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம். இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னை விட்டு பிரிந்து விட்டார். 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கி உள்ளார். தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாக மிரட்டுகிறார்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.