என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண். 'உய்யாலா ஜம்பால' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கடைசியாக 'நா சாமி ரங்கா' படத்தில் நடித்தார். தற்போது திரகம்பர சாமி, பாலே உன்னாலே படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, தற்போது நடிகையுடன் தொடர்பில் இருக்கும் ராஜ் தருண் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஐதராபாத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண் நார்சிங் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “ராஜ் தருண் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, உடல் ரீதியாக பயன்படுத்தினார். அதன்பின்னர் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம். இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னை விட்டு பிரிந்து விட்டார். 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கி உள்ளார். தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாக மிரட்டுகிறார்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.