காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் சமீபத்தில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. இந்த படத்தின் கதையும் பிரித்விராஜின் நடிப்பும் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையுடன் இயக்குனர் பிளஸ்சியும், பிரித்விராஜும் கிட்டத்தட்ட 14 வருடங்களாக பயணித்து வந்ததாக இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் கூறியுள்ளனர்,
இந்த நிலையில் இந்த படத்தை முதலில் இயக்க ஒப்புக்கொண்டு, பின்னர் விலகிவிட்டார் என பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் மீது இந்த படத்தின் கதாசிரியர் பென்யனின் சமீபத்தில் குற்றம் சாட்டும் விதமாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது ரசிகர்களிடமும் மலையாள திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தான் இயக்கியுள்ள மந்தாகினி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வரும் லால் ஜோஸ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, 15 வருடங்களுக்கு முன்பு பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலால் ஈர்க்கப்பட்டு அதை படமாக இயக்க வேண்டும் என அவருடன் இணைந்து பயணித்தேன். இதை நானே தயாரிக்க வேண்டும் என்பதற்காக சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் பதிவு செய்து, ஒரு பிரிட்டிஷ் கம்பெனியின் கூட்டணியில் இணைந்து தயாரிக்க முடிவு செய்து வேலைகளையும் கவனித்து வந்தேன். ஆனால் ஒரு நாள் இயக்குனர் பிளஸ்சி என்னிடம் போன் செய்து இந்த படத்தை தான் இயக்க விரும்புவதாக கூறினார்.
கதாசிரியர் பென்யமினும் இயக்குனர் பிளஸ்சி இந்த படத்தை இயக்கினால் மகிழ்ச்சி அடைவார் என எனக்கு தோன்றியது. பின்னர் வந்த நாட்களில் நானும் இதிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். ஆனால் 15 வருடங்கள் ஆனதாலோ என்னவோ இந்த விஷயத்தை வசதியாக மறந்து விட்டு இப்போது கதாசிரியர் பென்யமின் பேசுவது வருத்தத்தை தருகிறது. அதே சமயம் இயக்குனர் பிளஸ்சி இந்த படத்தை உருவாக்கி விதத்தில் எனக்கு மிகுந்த திருப்தி” என்று கூறியுள்ளார் லால் ஜோஸ்.