‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். சமீப காலமாக பட தயாரிப்பாளராகவும் மாறி வெற்றிகரமாக படங்களை தயாரித்து வருகிறார். அது மட்டுமல்ல தெலுங்கிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஜெய் கணேஷ் திரைப்படம் வரும் ஏப்-11ம் தேதி வெளியாக இருக்கிறது. ரஞ்சித் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் உன்னி முகுந்தனும் மகிமாவும் பம்பரமாக சுழன்று கலந்து கொண்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் உன்னி முகுந்தன் போலியோ மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கியுள்ளார். ஜெய் கணேஷ் படத்தில் நடிகர் உன்னி முகுந்தனும் இதேபோன்று நடக்க முடியாமல் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் படம் முழுவதும் சக்கர நாற்காலியில் பயணிப்பவராகவே நடித்துள்ளார். அதனால் மாற்றுத்திறனாளிகளின் தேவையை தன்னால் உணர முடிந்தது என்றும் தன்னால் முடிந்த சிறிய உதவி இது என்றும் கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.