சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக மிகப்பெரிய உயரத்தை தொட்டு விட்டவர் நடிகர் ராம்சரண். குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 10 வருடம் கழிந்த நிலையில் கடந்த வருடம் ராம்சரண் உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ‛கிளின் காரா' என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தான் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தின் போது கிடைத்த இடைவெளியில் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா கிளம்பி சென்றனர் ராம்சரண் தம்பதியினர். அங்கே யானை குட்டி ஒன்றை ராம்சரண் குளிப்பாட்டி விடுவதும் குழந்தையுடன் உபாசனா அதை பார்த்து ரசிப்பதுமான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பி உள்ளார் ராம்சரண்.




