மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக மிகப்பெரிய உயரத்தை தொட்டு விட்டவர் நடிகர் ராம்சரண். குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 10 வருடம் கழிந்த நிலையில் கடந்த வருடம் ராம்சரண் உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ‛கிளின் காரா' என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தான் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தின் போது கிடைத்த இடைவெளியில் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா கிளம்பி சென்றனர் ராம்சரண் தம்பதியினர். அங்கே யானை குட்டி ஒன்றை ராம்சரண் குளிப்பாட்டி விடுவதும் குழந்தையுடன் உபாசனா அதை பார்த்து ரசிப்பதுமான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பி உள்ளார் ராம்சரண்.