எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கன்னட திரையுலகில் உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார். திரையுலகில் நுழைந்து கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த சிவராஜ்குமார், தற்போது பிற மொழிகளின் பக்கமும் கவனத்தை திருப்பி உள்ளார். அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தமிழ் படங்களில் நடித்து விட்ட சிவராஜ்குமார், அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்க இருக்கிறார். நடிகர் பிரித்விராஜ் இயக்க உள்ள படத்தில் தான் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அனேகமாக மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்க உள்ள லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் மோகன்லாலுடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.