பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். மலையாள ரசிகர்களை மட்டுமல்ல தமிழ் ரசிகர்களிடமும் இவர் வரவேற்பை பெற்றுள்ளார். காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் கதாபாத்திரமும் படத்திற்கு படம் வித்தியாசமாக இருப்பது தான். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கும் முன்பு சூப்பர்மேன் கதை அம்சத்தில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி என்கிற படம் இவருக்கு அதிகமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
பஷில் ஜோசப் என்பவர் இயக்கி இருந்த இந்தப் படத்தில் இன்னொரு சூப்பர் மேனாக நடிகர் குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். இந்த நிலையில் ஆனந்த் டிவி என்கிற மலையாள சேனல் 2021க்கான விருது வழங்கும் விழாவை நடத்தியது. இதில் மின்னல் முரளி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார் டொவினோ தாமஸ்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மம்முட்டியிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுக் கொண்டார் டொவினோ தாமஸ். இந்த நிகழ்வில் டொவினோ தாமஸ் குறித்து வெகுவாக பாராட்டி பேசினார் மம்முட்டி. இதனால் நிகழ்ந்துபோன டொவினோ, “வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது. மம்முட்டியிடமிருந்து விருது, வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை பெற்றது ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.